அஇஅதிமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம்
உத்திரமேரூர் ஜீலை 15 2015:
காஞ்சிபுரம்
மாவட்டம் உத்திரமேரூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியங்களில் அஇஅதிமுக அரசின் நான்காண்டு
சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் சாலவாக்கம் மற்றும் உத்திரமேரூரில் செவ்வாய் கிழமை (14-07-2015) நடைப்பெற்றது.
கூட்டத்தில் காஞ்சி மேற்கு மாவட்ட கழக செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கினார்.
ஒன்றிய செயலாளர்கள் ஆர்.பிரகாஷ்பாபு, வி.ஆர்.அண்ணாமலை, ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.கமலக்கண்ணன்,
துணைத் தலைவர் ரவிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சி சட்ட மன்ற உறுப்பினர்
வி.சோமசுந்தரம், தலைமை கழக பேச்சாளர்கள் நடிகர் ராமராஜன், வடிவேலு, கனல் கிருஷ்ணமூர்த்தி,
ஆகியோர் நான்காண்டு சாதனைகளை விளக்கி கூறினர்.
இதில்
நடிகர் ராமராஜன் பேசியதாவது – ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் இந்தியாவிலேயே
யாரும்வாங்கிடாத அளவிற்கு வாக்குகளை பெற்றிறுக்கிறார் தமிழக முதல்வர் அம்மா அவர்கள்.
அனைத்து மாநில முதல்வர்களையும் பெயர் செல்லி அழைக்கும் மக்கள் தமிழகத்தில் மட்டும்
அம்மா என்று தான் அழைப்பர் ஏன் என்றார் இங்கு அனைவரின் மனதிலும் இடம்பிடித்திருப்பவர்
அம்மா மட்டும் தான், ஆர்.கே.நகர் தேர்தலிலே பயந்தோடிய திமுக வரும் சட்ட சபை தேர்தலை
கூட்டணியின்றி தனியாக சந்திக்க தயாரா? என்றார். இந்நிகழ்ச்சியில்
காஞ்சி பன்னீர் செல்வம், திருவந்தவார் முருகன், தங்கபஞ்சாட்சரம், தண்டரை தணிகைவேல், பூந்தண்டலம்ராஜேந்திரன்,
பொ.சசிக்குமார், மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் கா.ஜெயவிஷ்ணு, மேனலூர் கிளை செயலாளர் வேலாயுதம்,
அ.பி.சத்திரம்கோ.பெருமாள், வில்வபதி, ஏ.ராஜாமணி உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments