Disqus Shortname

மூலிகை மரகன்று நடுவிழா மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.

உத்திரமேரூர் ஜீலை, 03
  உத்திரமேரூர் ஒன்றியம் கைத்தண்டலம் கிராமத்தில் எழில்சோலை இயற்கை வேளாண் மூலிகைப் பண்ணையில் நேற்று அறியவகை மரமான செண்பக மரக்கன்று நடும் விழா நேற்று நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் எழில்சோலை அறக்கட்டளை நிறுவனர் பா.ச.மாசிலாமணி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு  தலைவர் ஆர்.கமலக்கண்ணன்,
நேர்முக உதவியாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சி மாவட்டஆட்சியர் வே.க.சண்முகம் கலந்து கொண்டு செண்பக மரக்கன்றை நட்டு வைத்து சிறப்புரையாற்றினார். இந்த மூலிகை பண்ணையில் 501 வது மூலிகை செடிஎன்கிறார் மூலிகை பண்ணை நிறுவனர் மாசிலாமணி இந்த விழாவின் போது மாவட்டஆட்சியர் மூலிகை செடிகள் மற்றும் அறியவகை மரங்கள் பார்வையிட்டர்.எழில்சோலை நிறுவனர் மாசிலாமணி அறியவகை மரங்கள் செடிகள் பற்றி விளக்கிகூறினார். நிகழ்ச்சியில் எழிச்சோலை செயலர் ம.எழிலரசி, ஆலோசகர் சரோஜாபாலகிருஷ்ணன், விவசாயிகள் மாரியப்பன், வேலு, மணி உட்பட ஏராளமான விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

No comments