Disqus Shortname

மின்வாரிய ஊழியரை அவதூராக பேசியவர்க்கு 3 ஆண்டு சிறை

உத்திரமேரூர், ஜூலை 11

உத்தரமேரூரை அடுத்த மேல்தூளி கிராமத்தில் கடந்த 05.08.2007 ல் தமிழ்நாடு
மின்சாரதுறை ஊழியர் நாகப்பன்(41) சகஊழியர்களுடன் மின் பராமரிப்பு
பணியாற்றி வந்தார். அப்போது அங்கு வந்த அதேபகுதியை சேர்ந்த சகாதேவர்(35)என்பவர் குடிபோதையில் நாகப்பன் மற்றும் ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளார். மேலும் நாகப்பனை தாக்கியுள்ளார். இது குறித்து நாகப்பன் உத்திரமேரூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த வழக்கு உத்திரமேரூர் நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி ஜெய்சங்கர் முன்னிலையில் இறுதி விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார். மின் ஊழியர்களை அவதூராக பேசி தாக்கியமைக்கு சகாதேவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்

No comments