Disqus Shortname

உத்திரமேரூர் பேரூராட்சியில் மேல்நோக்கி மிளிரும் தெருவிளக்கு


உத்திரமேரூர் 03-07-2015

உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட 3 வது வார்டு சின்னநாராசம் பேட்டையில்
சுமார் 150திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த
தெருவிலிருந்து கிழக்கு கம்மாளத் தெருவிற்கு செல்லும் சந்திப்பில் தெரு
விளக்கு உள்ளது. இந்த தெருவிளக்கு சுமார் 25 நாட்களுக்கு முன்பு
பராமரிப்புப் பணிக்காக பேரூராட்சி ஊழியர்கள் மின்விளக்கினை மேல்நோக்கி
திருப்பி வைத்தனர். வேலை முடிந்த பின்னர் மீண்டும் விளக்கிணை கீழ்நோக்கி
திருப்பாமல் விட்டு விட்டனர். 25 நாட்களுக்கு மேலாகியும் இந்த
தெருவிளக்கு மேல் நோக்கியே ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் சாலைகள்
சந்திப்பு இடம் என்பதால் இரவு நேரங்களில் அவ்வப்போது விபத்துக்கள்
ஏற்படுகிறது. மேலும் சாலைகளில் உள்ள மேடு பள்ளங்கள் தெரியாமல் வாகன
ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். இரவு நேரங்களில் கொள்ளையர்கள் பீதியில்
பொது மக்கள் அச்சத்துடனே உள்ளனர். இது போன்ற பேரூராட்சியின்
அலட்சியத்தால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மாலை
வேலைகயில் தெருவிளக்குகளை போட வரும் ஊழியர்களும் கூட இதனை
பொருட்படுத்தாமல் சென்று விடுகின்றனர். இதனால் இந்த பகுதி இரவு
நேரங்களில் இருளில் காணப்படுகிறது.எனவே பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த மின் விளக்கினை சரிசெய்திட அப்பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்

No comments