உத்திரமேரூர் அருகே பரபரப்பு கல்குவாரியில் குளிக்க சென்றவர் பலி
உத்திரமேரூர் 28/05/2023
உள்ளது. இந்த கல்குவாரி குட்டையில் வரதாபுரம் கிராமத்தை சேர்ந்த
நாகப்பன் 65 என்பவர் குளிப்பதற்காக சென்று குட்டையில் குளித்துள்ளார். பல
மணி நேரமாகியும் நாகப்பன் திரும்ப வராததால் பதறிய உறவினர்கள்
காஞ்சிபுரம் தீயணைப்பு துறை மற்றும் சாலவாக்கம் போலீசாருக்கும் தகவல்
அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு
வீரர்கள் பல மணி நேரம் போராடி நாகப்பனின் உடலை சடலமாக மீட்டனர்.
சாலவாக்கம் போலீசார் நாகப்பனின் சடலத்தை கைப்பற்றி பிரேத
பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து
இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments