Disqus Shortname

உத்திரமேரூர் கட்டியாம்பந்தல் இடையே அகற்றப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மீண்டும் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் பொது மக்கள் கோரிக்கை

உத்திரமேரூர் 22/05/20203

 உத்திரமேரூரில் குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்கும் விதமாக உத்திரமேரூர் காவல்துறை சார்பில் தனது கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாளான பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு காவல் நிலையத்தில் கண்காணிப்பட்டு வருகிறது. இதில் உத்திரமேரூர்செங்கல்பட்டு சாலையில் கட்டியாமந்தல் வரை கல்லூரி, பள்ளி வளாகம், அரசு அலுவலக வளாகம், பேருந்து நிலையங்கள் கூட்ரோடுகள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்திலும் காவல் துறை சார்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது இதனால் குற்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணமும் மேலும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள்களை கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தன. மேலும் சாலை விபத்துகள் ஏற்படும் போது கண்காணிப்பு கேமராவைக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 9 மாதங்களுக்கு முன்பு உத்திரமேரூர் புக்கத்துறை இடையே நான்கு வழிச்சாலை பணிகள் துவங்கியது. இந்த சாலைப் பணிகளுக்காக சாலை ஓரம் இருந்த பெரும்பாலான மரங்கள் அகற்றப்பட்டும் சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டும் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் சாலை ஓரங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் நெடுஞ்சாலைதுறை நிர்வாகத்தினர் அகற்றியதாக கூறப்படுகிறது. தற்போது சாலை பணியானது பட்டாங்குளம் எல்லை வரை பணிகள் முடிந்து வரும் நிலையில் சாலையேரங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மட்டும் தற்போது வரை பொருத்தப்படாமல் உள்ளது. இதனால் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களையும் விபத்து நிகழ்ந்தால் அதனை கண்டறிவதிலும் காவல்துறையினருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட துறையினர் உத்தரவிட்டு கண்காணிப்பு கேமராக்களை மீண்டும் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments