Disqus Shortname

உத்திரமேரூரில் ஜமாபந்தி நிறைவு விழா 269 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

உத்திரமேரூர் 
உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி கடந்த 16 ஆம் தேதியன்று துவங்கி நேற்று 26 தேதி வரை 8 நாட்கள் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில்
கோட்டாட்சியர் கனிமொழி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் குமார், ஞானசேகரன், பேரூராட்சி மன்றத் தலைவர் பொன்.சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உத்திரமேரூர் வட்டாட்சியர் லோகநாதன் அனைவரையும் வரவேற்றார். ஜமாபந்தி துவக்கிய நாள் முதல் 8 நாட்களில் உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து கிராம மக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, விதவை உதவித் தொகை, ரேஷன் கார்டு, புதிய பட்டா, பட்டா மாற்றம் இயற்கை மரணம் ஈமச்சடங்கு உதவிக் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 1125 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்களில் 269 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. தீர்வு காணப்பட்ட 269 பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள் உட்பட அரசுதுறை அலுவலர்கள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments