Disqus Shortname

உத்திரமேரூர் அரசு கல்லுாரியில் நாளை கலந்தாய்வு துவக்கம்

உத்திரமேரூர் 28/05/2023
 உத்திரமேரூர் அரசு கலை கல்லுாரியில், நாளை, கலந்தாய்வு துவங்க உள்ளது. உத்திரமேரூர் டாக்டர் எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் பத்மினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் உத்தரவின்படி, உத்திரமேரூர் அடுத்த, திருப்புலிவனத்தில் இயங்கும் டாக்டர் எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2023- - 24ம் கல்வியாண்டிற்கான மாணவ- - மாணவியர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு, நாளை காலை 9:30 மணிக்கு துவங்குகிறது. முதல் நாளில், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு, முன்னாள் படை வீரர், என்.சி.சி., என, சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது. ஜூன் 2ல் இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், ஜூன் 3ல் பி.காம்., வணிகவியல், பி.ஏ., பொருளியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், ஜூன் 5ல் பி.ஏ., தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. தர வரிசை அடிப்படையில், தகுதி வாய்ந்த மாணவ - மாணவியருக்கு, கல்லுாரி வாயிலாக குறுந்தகவல், மின்னஞ்சல் மற்றும் 'மொபைல்போன்' வாயிலாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.  

No comments