உத்திரமேரூர் பஜார் வீதியில் தனியார் கம்பெனி பஸ் மோதி மூதாட்டி பலி
உத்திரமேரூர்24/05/2023
உத்திரமேரூர் அடுத்த மருத்துவான்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன்
இவரது மனைவி ஆற்றங்கரையால் 70 இவர் நேற்று உத்திரமேரூர் பஜார்
வீதியில் கடைக்கு சென்றிருந்தார். அப்போது வைப்பனை கிராமத்திலிருந்து
புக்கத்துறை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்திற்கு
ஊழியர்களை ஏற்றிக் கொண்டு கம்பெனி பஸ் ஒன்று சென்று புக்கத்துறை
நோக்கி கொண்டிருந்தது. அப்போது பஜார் வீதி அருகே வந்த போது
எதிர்பாராத விதமாக மூதாட்டி ஆற்றங்கரையால் மீது மோதி
விபத்துக்குள்ளானது. இதில் மூதாட்டி நிலை தடுமாறி பஸ் டயரில் சிக்கினார்.
இதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
தகவல் அறிந்த உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து
மூதாட்டியின் உட்லை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து
விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய ஓட்டுநர் தேடி
வருகின்றனர்.
No comments