உத்திரமேரூர் அருகே பாலாற்றில் மூழ்கி சிறுவன் பலி
உத்திரமேரூர் 29/05/2023
உத்திரமேரூர் அடுத்த பழையசீவரம் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி
மின்வாரிய ஊழியர். இவரது மகன் சாமுவேல் 16 இவர் தனியார் பள்ளியில்
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 11 ஆம் வகுப்பு சேர உள்ளார். இந்நிலையில்
சாமுவேல் நேற்று தனது நண்பர்களுடன் பழையசீவரம் அருகே உள்ள
பாலாற்றில் குளிக்கச் சென்றுள்ளார். சாமுவேல் தண்ணீரில் மூழ்கி
நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கிய சாமுவேல்
வெகு நேரம் ஆகியும் வெளியே வராவில்லை. அச்சமடைந்த நண்பர்கள்
கூச்சலிட்டனர். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் தண்ணீரில் குதித்து
சாமுவேலை மீட்டு வாலாஜாபாத் அரசு மருத்துவமனைக்கு எடுத்து
சென்றனர். அங்கு சாமுவேலை பரிசோதனை செய்த மருத்துவர் சாமுவேல்
ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து தகவல் அறிந்த
சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சாமுவேலின் உடலை
மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.
No comments