ஒழையூர் கிராமத்தில் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
உத்திரமேரூர் அடுத்த ஒழையூர் கிராமத்தில் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைப்பெற்றது. சாலவாக்கம் ஒன்றிய செயலாளர்
டி.குமார் தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட நிர்வாகி எஸ்.ஆர்.வெங்கடேசன், மாவட்டக் குழு உறுப்பினர் சிவராமன், ஒன்றியக் குழு உறுப்பினர் நதியாகோபி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பெ.மணி, ஒன்றிய துணைச் செயலாளர் தமிழ்வேந்தன், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் ரத்தினமாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் முனுசாமி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ மற்றும் தலைமைக் கழகப் பேச்சாளர் மங்கலம் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு திமுக ஆட்சியின் இரண்டு ஆண்டு கால சாதனைகளை பட்டியலிட்டு பொது மக்களுக்கு எடுத்துரைத்தனர். மேலும் திமுக அரசு பொது மக்களுக்காக கொண்டுவரவுள்ள புதிய திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒழையூர் கிராமத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய பொருளாளர் பாலமுருகன், இளைஞரணி நிர்வாகிகள் விஷ்ணு, முரளி மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments