சார் பதிவாளரை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்
உத்திரமேரூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உத்திரமேரூர் சார் பதிவாளர் அலுவலகம் அருகே சார் பதிவாளரை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்
நடந்தது.. ஆர்பாட்டத்தில் உத்திரமேரூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்
தண்டபாணி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் வழக்கறிஞர்களை அவதுாறாக பேசிய சார்பதிவளர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திடு, அனைத்து பத்திர பதிவிற்கும் லஞ்சம் வாங்கும் சார் பதிவாளரை இடமாற்றம் செய்யதிடு, சரியான நேரத்திற்கு பணிக்கு வராத சார்பதிவாளர் மீது மாவட்ட நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து சார் பதிவாளருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
No comments