உத்திரமேரூரில் அக்கவின் பிரிவை தாங்க முடியாமல் தம்பி தூக்கிட்டு தற்கொலை
உத்திரமேரூர் 27/08/2020
உத்திரமேரூரை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ஏழுமலை வள்ளி தம்பதியர்.
இவர்களுக்கு பவித்ரா 18 என்ற மகளும், மணிபாரதி 16 என்ற மகனும் உள்ளனர். மகள் பவித்ரா கடந்த வாரம் வீட்டிற்கு தெரியாமல் கடல்மங்கலம்
கிராமத்தை சேர்ந்த இளைஞருடன் காதல் திருமணம் செய்து கொண்டார்.
இதனால் மனமுடைந்த தம்பி மணிபாரதி அக்காவின் பிரிவை தாங்க முடியாமல் மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டார். இந்நிலையில் நேற்று
தனிமையில் இருந்த மணிபாரதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து
கொண்டார். இதை கண்ட பெற்றோர் கதறி அழுதனர். இதையடுத்து அக்கம்
பக்கத்தினர் இது குறித்து உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உத்திரமேரூர் போலீசார்
மணிபாரதியின் உடலை மீட்டு பிரோதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு
அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிவு
செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments