Disqus Shortname

உத்திரமேரூர் அருகே அதிமுக சார்பில் 2 ஆயிரம் ஏழை, எளிய குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கல்

உத்திரமேரூர் 18/08/2020
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட மானாம்பதி, ஆர்.என்.கண்டிகை, ராவத்தநல்லூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சுமார் 2 ஆயிரம் ஏழை, எளிய குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காஞ்சி மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் மற்றும் கழக அமைப்புச் செயலாளர் மாவட்ட கூட்டுறவு சங்கத் தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு கொரோனா நிவாரண உதவியாக அரிசி, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணை, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். மேலும் அரசு கூறும் வழிமுறைகளை கடைபிடித்து பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தினார். முன்னதாக முன்னாள் முதல்வர்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மாவின் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் போது பொது மக்கள் சமூக இடைவெளியுடன் நிவாரணப் பொருட்களை வாங்கிச்சென்றனர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் தங்கபஞ்சாட்சரம், பிரகாஷ்பாபு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றத் செயலாளர் தண்டரை தணிகைவேல், அமலோர்பவராஜ், துரைபாபு, ரஞ்சித், வேலு கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments