Disqus Shortname

உத்திரமேரூர் அருகே மணல் கொள்ளையில் ஈடுபட்ட 4 மாட்டு வண்டிகள் பறிமுதல் 4 பேர் கைது

உத்திரமேரூர் 26/08/2020
உத்திரமேரூர் அடுத்த ஒழுகரை கிராமம் அருகே உள்ள செய்யாற்று படுகையில் மணல் கொள்ளை நடப்பதாக உத்திரமேரூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உத்திரமேரூர் போலீசார் அங்கு சோதனை செய்தனர். அப்போது செய்யாற்று  படுகையில் மாட்டு வண்டிகளில் சட்ட விரோதமாக மணல் கொள்ளையடிப்பது தெரியவந்தது. இதையடுத்து மணல் கொள்ளையில் ஈடுபட்ட 4 மாட்டு வண்டிகளை போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் விசாரணை செய்ததில் ஒழுகரை கிராமத்தை சேர்ந்த முனுசாமி 30, முருகன் 32, பரசுராமன் 30, காண்டீபன் 40 ஆகியோர் மணல் கொள்ளையில் ஈடுபட்டது
தெரியவந்தது.. இதையடுத்து மணல் கொள்ளைக்கு பயன்படுத்திய 4 மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்த உத்திரமேரூர் போலீசார் மணல் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.

No comments