Disqus Shortname

உத்திரமேரூர் அருகே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2020-21 ஆம் ஆண்டிற்காக மாணவர் சேர்க்கை துவக்கம்

உத்திரமேரூர் 27/08/2020
உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் பகுதியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்.,அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2020–21 ம் கல்வியாண்டுக்கான இளங்கலை, இளம் அறிவியல் பட்ட படிப்புக்கான மாணவ–மாணவியர் சேர்க்கை நாளை (28.08.2020) காலை 10:00 மணிக்கு துவங்க உள்ளது. இதில் முதற்கட்டமாக முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு சிறப்பு பெற்றவர்கள், தேசிய மாணவர் படை மற்றும் மாற்றுத்திறனாளிகள்  ஆகியோருக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும். பொது பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை, ஆக., 31 முதல் செப்., 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. சேர்க்கைக்கு வரும் மாணவ–மாணவியர் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகியவற்றின் பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் சாதிச்சான்று ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் 2 பிரதி கொண்டு வரவேண்டும். மேலும் விபரங்களுக்கு இக்கல்லுாரியின், http://www.gascuthiramerur.in என்ற இணையத்தில் தெரிந்துகொள்ளலாம் என, இக்கல்லுாரியின் முதல்வர் முனைவர் க.ரங்கசாமி (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.

1 comment: