உத்திரமேரூர் அருகே போக்குவரத்து பணிமனை வளாகத்தில் போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்பாட்டம்
உத்திரமேரூர் அடுத்த வேடபாளையம் கிராமத்தில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை வளாகத்தில் போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. ஆர்பாட்டத்தில் தொமுச மண்டல துணை செயலாளர் து.சுந்தர் தலைமை தாங்கினார். ஆர்பாட்டத்தில் தனியார் பேருந்தை வாடகைக்கு எடுக்கும் முறையினை கைவிடு, போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்திட போதிய நிதி வழஙகிடு, தொழிலாளியிடம் பறிக்கப்பட்ட விடுப்பை திரும்ப வழங்கிடு, பிடிக்கப்பட்ட ஊதியத்தை திரும்ப வழங்கிடு, ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பண பலன்களை உடனடியாக வழங்கிடு தமிழ்நாடு மோட்டார் வாகன புதிய சட்டம் 288 அ வை கைவிடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. நிகழ்ச்சியில் போக்குவரத்து தொழிற்சங்க கூட்ட்மைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments