Disqus Shortname

உத்திரமேரூர் அருகே சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பலி

உத்திரமேரூர் 05/09/2020
உத்திரமேரூர் அடுத்த வாடாதவூர் கிராமத்தை சேர்ந்தவர் தயாளன் கூலித் தொழிலாளி.இவரது மகன் தனுஷ், 18, அரசு பள்ளியில், +2 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அதே ஊரை சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் மூர்த்தியின் மகன் ஸ்ரீவர்ஷன் 14 என்பவரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு சாலவாக்கம் நோக்கி சென்று  கொண்டிருந்தார். அப்போது பாண்டவாக்கம் பஸ்நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந் த  போது பாண்டவாக்கம் சாலை வளைவின் அருகே வந்த போது எதிரே வந்த தனியார்
கம்பெனி பஸ் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த  இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இது குறித்து அப்பகுதி மக்கள் உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் உத்திரமேரூர் போலீசார் சம்பவத்தில் பலத்த காயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஸ்ரீவர்ஷன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். தனுஷ் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது  குறித்து உத்திரமேரூர் போலீசார் விசாரணை நட்த்தி வருகின்றனர்.

No comments