Disqus Shortname

உத்திரமேரூர் அருகே திமுக சார்பில் 2500 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள்

உத்திரமேரூர் 25/08/2020
உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு திமுக சார்பில் தொடர்ந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி, ராவத்தநல்லூர், விசூர் கூட்ரோடு,ஆர்,என்.கண்டிகை ஆகிய கிராமங்களில் ஊரடங்கில் பாதிக்கப்பட்டுள்ள சுமார்
2500 குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக அரிசி, காய்கறி, மளிகை
பொருட்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் காஞ்சி தெற்கு
மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ மற்றும் காஞ்சி நாடாளுமன்ற
உறுப்பினர் சிறுவேடல் ஜி.செல்வம் ஆகியோர் பொதுமக்களுக்கு நிவாரண
உதவிகளை வழங்கி பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினர். நிகழ்வின்போது
ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், செயற்குழு உறுப்பினர் நாகன், விவசாய
அணி அமைப்பாளர் ஏழுமலை, பொறியாளர் அணி சசிகுமார், தயாளன்,
சுந்தர்ராமன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments