உத்திரமேரூர் அருகே வாடாதவூர் கிராமத்தில் 84 பேருக்கு கொரோனா பரிசோதனை
உத்திரமேரூர் 18/08/2020
உத்திரமேரூர் அடுத்த வாடாதவூர் கிராமத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நேற்று நடந்தது. முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகுமார் தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தார், தூய்மை பாரதத் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், ஊராட்சி செயலர் அரிகோவிந்தன் அனைவரையும் வரவேற்றார், முகாமில் மானாம்பதி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர் தீபலட்சுமி தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு வாடாதவூர் கிராம மக்களுக்கு தெர்மல் ஸ்கேன்
பரிசோதனை, சளி பரிசோதனை, சாதாரண காய்ச்சல் உள்ளவர்களுக்கு
தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கி பல்வேறு ஆலோசனைகள்வழங்கப்பட்டது. பொது மக்கள் அனைவருக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மேலும் முக கவசம், சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு பாதுகாப்பாக இருக்க பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள், பொது மக்கள் 84 பேர் பரிசோதனை செய்து கொண்டனர்.
உத்திரமேரூர் அடுத்த வாடாதவூர் கிராமத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நேற்று நடந்தது. முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகுமார் தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தார், தூய்மை பாரதத் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், ஊராட்சி செயலர் அரிகோவிந்தன் அனைவரையும் வரவேற்றார், முகாமில் மானாம்பதி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர் தீபலட்சுமி தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு வாடாதவூர் கிராம மக்களுக்கு தெர்மல் ஸ்கேன்
பரிசோதனை, சளி பரிசோதனை, சாதாரண காய்ச்சல் உள்ளவர்களுக்கு
தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கி பல்வேறு ஆலோசனைகள்வழங்கப்பட்டது. பொது மக்கள் அனைவருக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மேலும் முக கவசம், சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு பாதுகாப்பாக இருக்க பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள், பொது மக்கள் 84 பேர் பரிசோதனை செய்து கொண்டனர்.
No comments