Disqus Shortname

உத்திரமேரூர் அருகே பறக்கும்படையினர் தீவிர வாகன சோதனை

உத்திரமேரூர் மார்ச், 15
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சியினர் வாகனங்களில் பணம் கொண்டு சென்று வாக்காளர்களுக்கு வழங்குவதைத் தடுக்கும் வகையில், பறக்கும்  படையினர் வாகனச் சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழக சட்டப்பேரவைத்  தேர்தல் மே 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர்  வாகனங்களில் பணத்தைக் கொண்டு சென்று, வாக்காளர்களுக்குக் கொடுப்பதைத்  தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனச் சோதனையில்  ஈடுபட்டுவருகின்றனர். இதில் உத்தரமேரூர் சட்ட மன்றத்திற்குட்பட்ட தேர்தல்  நிலை மற்றும் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் தலைவர்
பிரகாஷ்பாபு தலைமையில் காவல்துறை உதவி ஆய்வாளர் மனோகரன், மற்றும் தலைமை  காவலர்கள் மானாம்பதி கூட்ரோடில் தேர்தல் பணம் பரிவர்தனை சம்மந்தமாக தீவிர  வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர். இதேப் போல் நெல்வாய் கூட்ரோடு, உத்தரமேரூர் காஞ்சிபுரம் சாலை செங்கல்பட்டு சாலை உள்ளிட்ட இடங்களில் தேர்தல் குழுவினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

No comments