Disqus Shortname

உத்திரமேரூர் அருகே பைக்குகள் மோதி 2 பேர் பரிதாப பலி : 2 பேர் சீரியஸ்

உத்திரமேரூர்24/3/2016 : உத்திரமேரூர் அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். 2 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆவடியை சேர்ந்தவர் சிவகுமார் (35). டெய்லர். இவரது மனைவி பவித்ரா (30). இருவரும் உத்திரமேரூர் அருகே உள்ள காக்கநல்லூர் கிராமத்தில் உள்ள தங்களது குலதெய்வமான கள்ளக்குறத்தியம்மன் கோயிலுக்கு நேற்று காலை பைக்கில் சென்றனர். கோயிலில் தரிசனத்தை முடித்து விட்டு வீட்டுக்கு புறப்பட்டனர்.உத்திரமேரூர்- செங்கல்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்தனர். எதிரே, ஆதவபாக்கத்தை சேர்ந்த ரகுபதி (45), சேகர் ஆகியோர் உத்திரமேரூர் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தனர். சிறுங்கோழி அருகே இரு பைக்குகளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.
இதில் சிவகுமார் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். பவித்ரா, படுகாயம் அடைந்தார். மற்ற இருவரும் மயக்கம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, பவித்ரா உட்பட 3 பேரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சேகர் இறந்தார். தகவல் அறிந்து உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிவகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments