மீனாட்சி அம்மாள் குளோபல் பள்ளியில் மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழா
காஞ்சிபுரம்
மாவட்டம் உத்திரமேரூரில் மீனாட்சி அம்மாள் கல்வி அறக்கட்டளை கீழ் இயங்கி வரும் உத்திரமேரூர்
மீனாட்சி அம்மாள் குளோபல் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில்
பள்ளி முதல்வர் சாந்திபாலாஜி தலைமை தாங்கினார். உத்திரமேரூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின்
மேலாளர் எம்.பி.மோகன், மீனாட்சி அம்மாள் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் என்.கவிராஜன்,
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முனைவர் முருகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை
குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து மழலையர்களுக்கு பட்டமளிப்பு சான்றிதழ்கள் வழங்கி
பதக்கங்கள் அனிவித்து சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியின் போது பள்ளி மாணவ –மாணவியரின்
கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முடிவில் பள்ளி ஆசிரியை நிர்மலா நன்றி கூறினார்.
No comments