Disqus Shortname

வியாக்ரபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

உத்திரமேரூர் மார்ச், 12
உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான
வியாக்ரபுரீஸ்வரர் கோவில் கடந்த 2010 மே மாதம் புணரமைக்கப்பட்டு
கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன் இதில்
இரண்டு கலசங்கள் சிதிலமடைந்தது. இந்நிலையில் சிதிலமடைந்த இந்த
இராஜகோபுரங்களை புணரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. பணி நிறைவடைந்துநேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கும்பாபிஷேகத்தை யொட்டி கடந்த கடந்த இரண்டு நாட்களும் கோபூஜை, குருபூஜை, விநாயகர்பூஜை, காப்புகட்டுதல், கோபுரகலசம், ஸ்தாபிதம், சிலைகள் அர்த்த மண்டபத்தில் அமைத்தல் முதல்கால யாகபூஜை, இரண்டாம் கலசங்கள், வேள்வி கலச பூஜைகள் உள்ளிட்டவைகள் நடந்தது.
இதை தொடர்ந்து நேற்று காலை மூன்றாம் கால கலசவிளக்கு, கணபதி ஹாமம்,
முடிந்ததும் புனித நீரை கலசத்தின் மீது ஊற்றி பொது மக்களின் மீது புனித
நீர் தெளிக்க கும்பாபிஷேகம் சிறப்பாக நடைப்பெற்றது. நிகழ்ச்சியில்
திரைப்பட நகைச்சுவை நடிகை சச்சு, ஊராட்சி மன்ற தலைவர் சரளா, துணைத்
தலைவர் மீனாட்சிவீரராகவன், தண்டரை தணிகைவேல், உட்பட பலர் கலந்து
கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாகுழுவினர் சிறப்பாக
செய்திருந்தனர்.

No comments