Disqus Shortname

உத்திரமேரூர் ஸ்ரீ சுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் தெப்போற்சவ விழா

உத்திரமேரூர்
 உத்திரமேரூரில் பிரசித்தி பெற்ற கோவிலான ஆனந்தவல்லி நாயக சமேத ஸ்ரீ சுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் தெப்போற்சவ விழா நேற்று வெகு விமரிசையாக துவங்கியது. விழாவையொட்டி ஸ்ரீ சுந்தரவரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தபின் பூக்களினால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஸ்ரீ தேவி பூ தேவியர்களுடன் ஸ்ரீ சுந்தரவரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் மாட வீதி வழியாக திரு வீதியுலா வந்த பெருமாளுக்கு பக்தர்கள் தீபாராதனை காட்டியும் தேங்காய் உடைத்தும் வழிபட்டனர். இதைத் தொடர்ந்து வானவேடிக்கைகளுடன் மேளதாளங்கள் முழுங்க கோவில் குளத்தில் வண்ண மலர்கள் மற்றும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுந்தரவரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவிகளுடன் எழுந்தருளி குளத்தினை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மூன்று நாட்கள் நடைப்பெறும் இந்த தெப்போற்சவத்தின் முதல் நாளான நேற்று குளத்தினை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவையொட்டி கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்

No comments