Disqus Shortname

உத்திரமேரூர் அருகே இரண்டாம் வகுப்பு மாணவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி தாளாளர் மீது வழக்கு பதிவு

உத்திரமேரூர் 
உத்திரமேரூர் அருகே மானாம்பதி ஊராட்சிக்குட்பட்ட விசூர் சாலையில் தனியார் சி.பி.எஸ்.சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பாதர் சகாயராஜ் 50 தாளாளராக உள்ளார். இந்நிலையில் பள்ளியில் பயிலும் இரண்டாம் வகுப்பு மாணவனுக்கு சில தினங்களாக பள்ளி தாளாளர் பாதர் சகாயராஜ் பாலியல் சீண்டல் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து இரண்டாம் வகுப்பு மாணவன் தனது பெற்றோர்களிடம் தாளாளரின் பாலியல் சீண்டல் குறித்து கூறியதாக தெரிகிறது. இதையடுத்து மாணவனின் பெற்றோர் சைல்ட் லைனை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளனர். புகாரின் பேரில் பெருநகர் போலீசார் பாதர் சகாயராஜ் மீது வழக்கு பதிவு செய்து பள்ளி தாளாளர் பாதர் சகாயராஜை தேடி வருகின்றனர்.

No comments