உத்திரமேரூர் அருகே நல்லூர் கிராமத்தில் மாற்றுதிறனாளிகள் அலுலவக திறப்பு மற்றும் பேரவைக் கூட்டம்
உத்திரமேரூர் அருகே நல்லூர் கிராமத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள்
மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் அலுவலகம் திறப்பு விழா மற்றும் பேரவை
கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர்
சரவணன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் சேகர் அனைவரையும் வரவேற்றார் மாவட்ட
தலைவர் பாலாஜி, மாவட்ட செயலாளர் முனுசாமி, வார்டு உறுப்பினர் குணசேகரன்,
வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாநில செயலாளர் ஜீவா கலந்து
கொண்டு அலுவலகத்தினை திறந்து வைத்து பேரவை கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் உத்திரமேரூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கனரா வங்கி ஆகிய வங்கிகளில்
மாற்றுத்திறனாளி வந்து சொல்ல கைப்பிடியுடன் கூடிய சாய்வு தளம் அமைத்திட வேண்டும்,
உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் மாற்று
திறனாளிகள் செல்ல ஏதுவாக வீல் சேர் வைத்திட வேண்டும், சாதாரண மாற்றுத் திறனாளிகளுக்கு
மாதம் ரூபாய் 3000 மும், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு ரூபாய் 5000 மும்
உதவித்தொகை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில் உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள மாற்று திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments