Disqus Shortname

உத்திரமேரூர் அருகே அரசு பள்ளியில் ஆண்டு விழா

உத்திரமேரூர் 

உத்திரமேரூர் அடுத்த பெருநகர் ஊராட்சிக்குட்பட்ட சேத்துப்பட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் வட்டார கல்வி அலுவலர் கலாவதி தலைமை தாங்கினார். வட்டார வள மையம் மேற்பார்வையாளர் செந்தில்முருகன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை தில்லைக்கரசி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் மங்களகௌரிவடிவேலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவ மாணவியர்களின் பரதநாட்டியம், நடனம், யோகா, விழிப்புணர்வு பாடல்கள், நாடகங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையில் கிராமத்து மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதனை தொடர்ந்து பள்ளியில் நடந்த விளையாட்டு, கட்டுரை, கவிதை, ஓவியம் என பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வியாளர்கள், பெற்றோர்கள் கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

No comments