Disqus Shortname

உத்திரமேரூர் ஸ்ரீ.நூக்காலம்மன் கோவிலில் பாலாலயம்

உத்திரமேரூர்

உத்திரமேரூரில் எண்டத்தூர் சாலையில் பிரசித்திப் பெற்ற நூக்காலம்மன் ஆலயம் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும், ஆடி மாதம் தீமிதித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இக்கோவில் புணரமைப்பு மற்றும் கோபுரம் அமைக்கும் பணியானது நடைப்பெற்று வருகிறது. இதனால் கோவிலில் பாலாலயம் செய்ய பக்தர்களால் தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில் ஸ்ரீ.நூக்காலம்மன் ஆலயத்தில் பாலாலய நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி கோவில் வளாகத்தில் யாகம் வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டு கலசங்களில் புனித நீர் கொண்டு பாலாலயம் செய்யப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பக்தர்கள் பொது மக்கள் என பலர் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

No comments