Disqus Shortname

உத்திரமேரூரில் குடிக்க பணம் தராத கடைகாரருக்கு குத்து

உத்திரமேரூர் 
உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட வைகுண்ட பெருமாள் கோவில் தெருவில் முடி திருத்தகம் கடை நடத்தி வருபவர் சம்பத்குமார் 43 இவரது நண்பர் பட்டஞ்சேரி பகுதியை சேர்ந்த யுவராஜ் 42. குடிப்பழக்கம் உள்ள யுவராஜ் நேற்று இரவு சம்பத்குமார் கடைக்கு சென்று சம்பத்குமாரிடம் குடிப்பதற்காக பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் சம்பத்குமாருக்கும் யுவராஜுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைலப்பாக மாறியது இதில் ஆத்திரமடைந்த யுவராஜ் கடையில் இருந்த கண்ணாடியினை உடைத்து சம்பத்குமாரின் வயிற்றுப் பகுதியில் குத்தியதாக கூறப்படுகிறது. மேலும் சம்பத்குமார் யுவராஜ் தாக்கியதாகவும் தெரிகிறது. இதில் இருவரும் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உத்திரமேரூர் போலீசார் காயமடைந்த இருவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் சம்பத்குமார் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments