Disqus Shortname

உத்திரமேரூர் அருகே மனஉளைச்சல் காரணமாக முதியவர் டிரான்ஸ்பார்மர் மீது ஏரி மீன்சாரம் தாக்கி பலி

உத்திரமேரூர் 
உத்திரமேரூர் அருகே அரசாணிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆண்டி 65 கூலி தொழிலாளி. இவருக்கு கலா என்ற மனைவியும் சுமதி என்ற மகளும் சீதாராமன் விக்ரம் என்ற மகன்களும் உள்ளனர். இந்நிலையில் ஆண்டி சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் ஆண்டி மிகவும் மன உளைச்சலில் காணப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை மன உளைச்சல் மிகுந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆண்டி வீட்டிற்கு அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் மீது ஏறி மின்சாரம் செல்லும் மின் கம்பியை பிடித்ததாக கூறப்படுகிறது இதில் ஆண்டி தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார் தகவல் இந்த உத்தரமேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆண்டியின் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments