Disqus Shortname

உத்திரமேரூர் அருகே எல்.எண்டத்தூர் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 54 சவரன் தங்க நகை கொள்ளை

உத்திரமேரூர் 14/02/2024
உத்திரமேரூர் அருகே எல்.எண்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி 60 இவரது கணவர் பாண்டுரங்கன் இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு தஞ்சாவூரில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் எல்.எண்டத்தூரில் உள்ள வீட்டில் சரஸ்வதி மட்டும் தனிமையில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் பின்புறம் உள்ள வீட்டில் தங்கியுள்ளார். இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பீரோவிலிருந்த சுமார் 54 சவரன் தங்க நகை கொள்ளை போனது தெரிய வந்தது. இது குறித்து உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பெயரில் உத்தரமேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments