Disqus Shortname

உத்திரமேரூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் எனும் திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

உத்திரமேரூர்

 தமிழ்நாடு முதல்வர் மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 24 மணி நேரம் மாவட்ட ஆட்சியர்கள் தங்கி இருந்து மக்கள் கோரிக்கைகளை பெற்றும் மற்றும் அரசு நல திட்ட பணிகளை ஆய்வு செய்ய அறிவுறுத்தி இருந்தார். அதனடிப்படையில் இந்த மாதம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று காலை 9 மணி முதல் பல்வேறு இடங்களில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்விமோகன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் உத்திரமேரூர் அருகே மானாம்பதி நறிகுறவர்கள் குடியிருப்பு பகுதிகளில் சென்று அங்கு குடியிருப்புகளை பார்வையிட்டு நறிகுறவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு ஆட்சியர் கலைச்செல்விமோகன் பொதுமக்களிடம் மருத்துவ வசதிகள் குறித்து கேட்டு அறிந்தார். மேலும் அங்கு மருந்து இருப்புகள் மற்றும் சிகிச்சையும் முறைகளை குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார். பின்னர் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவமனை கட்டிடப் பணிகளை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து மானாம்பதி அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களை ஆய்வு மேற்கொண்டு மதிய உணவுகளை பரிசோதனை செய்தார். மேலும் பள்ளி மாணவர்களோடு உரையாடி அவர்களின் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தார். அங்கன்வாடி மையத்தில் பயின்று வரும் மாணவர்களின் எடை மற்றும் உயரம் குறித்து கோப்புகளை பார்வையிட்டார். பின்னர் வேடபாளையம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடைபெறும் 100 நாள் பணிகள் மற்றும் பணியாளரின் வருகை பதிவேட்டை ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து உத்திரமேருர் பேரூராட்சியில் ரூ 1.5 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகனமேடையினை பார்வையிட்டு செயல்முறைகள் குறித்து கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்விமோகன் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த ஆய்வின்போது வட்டாட்சியர் கருணாகரன், பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன், பேரூராட்சி மன்றத் தலைவர் பொன்சசிகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ராதாநடேசன் அரசுதுறை அலுவலர்கள் என பலர் உடனிருந்தனர்.

No comments