உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி சிறப்பு முகாம் எம்.எல்.ஏ க.சுந்தர் துவக்கி வைத்தார்.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட 73 ஊராட்சிகளிலும் சுழற்சி முறையில்
தொடர்ந்து கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு
வருகிறது. இதனால் கிராம மக்கள் ஏராளமானோர் பயனடைந்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில்
கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், வேல்முருகன் ஆகியோர்
தலைமை தாங்கினர். ஊராட்சி செயலாளர் சக்திவேல் அனைவரையும்
வரவேற்றார். நிகழ்ச்சியில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர்
எம்.எல்.ஏ கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்து
சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் சாலவாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய
மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு சாலவாக்கம் பகுதி மக்களுக்கு
கொரோனா பரிசோதனை செய்து மருந்துமாத்திரைகள் வழங்கினர். மேலும்
பொது மக்கள் ஏராளமானோர் ஆர்வத்தோடு கலந்து கொண்டு தடுப்பூசி
போட்டுக் கொண்டன
ர். நிகழ்ச்சியில் மருத்துவ குழுவினர் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
ர். நிகழ்ச்சியில் மருத்துவ குழுவினர் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments