Disqus Shortname

உத்தரமேரூரில் சாராய ஊறல் போட்ட 8 பேர் கைது

உத்தரமேரூரில் சாராய ஊறல்கள் அழிப்பு : ஊறல்வியாபாரிகள் எட்டு பேருக்கு கைது; தமிழகத்தில் கடந்த மாதம், 24 முதல் தளர்வுகள் அகற்ற ஊரடங்கு அமலில் உள்ளதால், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மதுபானம் இல்லாமல் குடிமகன்கள் தவித்து வருவதால், உத்தரமேரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக சிலர் சாராயம் காய்ச்ச ஊறல் போடப்பட்டிருப்பதாக உத்தரமேரூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து உத்தரமேரூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான தனிப்படைபோலீசார், உத்தரமேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் சோதனை செய்தனர். இதில், உத்தரமேரூர் எம்.ஜி.ஆர்., நகர், வேடபாளையம், கருவேப்பம்பூண்டி உள்ளிட்ட இடங்களில், சாராயம் காய்ச்சுவதற்காக போடப்பட்டிருந்த, 100 க்கும் மேற்ப்பட்ட பதப்படுத்தப்பட்ட, ஊறலை அழித்தனர். இது தொடர்பாக, எட்டு பேரை கைது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments