Disqus Shortname

வெளியே வந்தால் கடும் நடவடிக்கை… எச்சரித்த உத்திரமேரூர் போலீசார்… 1200வாகனங்கள் பறிமுதல்…!

உத்திரமேரூர் 02/06/2021
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் வருகிற 7-ந் தேதி வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்திரமேரூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவசர தேவைகளை தவிர்த்து வெளியிடங்களில் சுற்றித்திரியும் வாகனங்கள் ஆங்காங்கே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படுவதோடு அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நேற்று வரை உத்திரமேரூர் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டதில், முககவசம் அணியாமல் வெளியிடங்களுக்கு வந்த 700பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது , பொது இடங்கள் கடைகள் போன்ற இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது சுமார் 850 வழக்குகள் பதியப்பட்டுள்ளது . அதேபோல, ஊரடங்கை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த1200 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டன.

No comments