Disqus Shortname

உத்திரமேரூர் அருக மதுபாட்டில்கள் பறிமுதல்

உத்திரமேரூர் உத்திரமேரூர் அருகே  ஒரகாட்டுபேட்டை பகுதியில் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை  செய்வதாக சாலவாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின்பேரில் ஒரகாட்டுபேட்டை கிராமத்திற்கு சென்ற சாலவாக்கம் போலீசார் அங்கு தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில்  ஒரகாட்டுபேட்டை பகுதியை சேர்ந்த மாணிக்கம் 51 என்பவர் வெளிமாநில மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது இதை அடுத்து சம்பவ இடத்திற்கு சாலவாக்கம் போலீசார் விரைந்தனர். போலீசாரை கண்டத்தும் மாணிக்கம் மதுபானங்களை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச் சென்றார். இதையடுத்து போலீசார் மறைத்து வைத்திருந்து 10 வெளிமாநில மதுபாட்டில்கள் மற்றும் அவரின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த சாலவாக்கம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments