உத்தரமேரூரில் டாக்டர் கலைஞர் 98 வது பிறந்த நாளை கொரோனா நிவாரண உதவி வழங்கி கொண்டாடிய திமுகவினர்
உத்திரமேரூர் பேரூராட்சி பகுதியில் கலைஞரின்
98வது பிறந்த நாள் விழாவையொட்டி சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள்
மற்றும் முடித்திருத்தக தொழிலாளர்கள் அனைவருக்கும் கொரோனா நிவாரண உதவியாக நலத்திட்ட
உதவிகள் வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் உத்தரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன்
தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாரிவள்ளல் அனைவரையும் வரவேற்றார். விவசாய அணி
அமைப்பாளர் சோழனூர் மா.ஏழுமலை, இலக்கிய அணி துணை அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன்,
பொறியாளர் அணி நிர்வாகி சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சி திமுக தெற்கு
மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ கலந்து கொண்டு நிவாரண உதவிகள் வழங்கும்
நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். முன்னதாக பேரூந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த
கலைஞரின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனை
தொடர்ந்து இரண்டாயிரம் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில்
திமுக நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments