Disqus Shortname

உத்திரமேரூர் அருகே தனியார் கலை கல்லூரியில் வனத்துறை சார்பில் டாக்டர் கலைஞர்  அவர்களின் பிறந்தநாளையொட்டி ஆயிரம் மரம் நடுவிழா

உத்திரமேரூர் மதுராந்தகம் சாலையில் புழுதிவாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் அக்ஷயா கலை அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 98 வது பிறந்த நாளையொட்டி வனத்துறை சார்பில் மரம் நடு விழா நடைபெற்றது. விழாவின் வனச்சரக அலுவலர் சிவபெருமான் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் அகிலன் ராமநாதன், வனவர்கள் பிரபாகரன் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர்  எம்.எல்.ஏ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்  ஜி செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்று நடும் விழாவை துவக்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து கல்லூரி முழுவதும் பலன் தரும் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் மொத்தம் ஆயிரம் மரக்கன்றுகள் நடதிட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில்  சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார் மருத்துவர் அணி நிர்வாகி டாக்டர் திவாகர் வாசுதேவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments