Disqus Shortname

உத்திரமேரூரில் எம்.ஜி.ஆா். 33-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

 உத்திரமேரூர்

உத்திரமேரூர் ஒன்றிய அஇஅதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 33-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளையொட்டி உத்திரமேரூர் பஜார் வீதியிலுள்ள எம்.ஜி.ஆரின் திரு உருவச்சிலைக்கு காஞ்சி மாவட்ட செயலாளர் சோமசுந்தரம்மற்றும் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருஉருவச்சிலைக்கு தீபாராதனை காட்டியும் தேங்காய் உடைத்தும் மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர்பின்னர் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் தருமன், கே.பிரகாஷ்பாபு, தங்கபஞ்சாட்சரம், மாவட்ட இளைஞரணி பொருளாளர் ஜெயவிஷ்ணு, இளைஞரணி செயலாளர் துரைபாபு, கம்மாளம்பூண்டி பெருமாள், நாஞ்சிபுரம் புருஷோத்தமன் உட்பட நிர்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

No comments