உத்திரமேரூரில் கிராம சபைக் கூட்டத்தில் அதிமுகவை நிராகரிப்போம் தீர்மானம் நிறைவேற்றம்
உத்திரமேரூர் 23/12/2020
சாலவாக்கம், பெருநகர், மானாம்பதி
கண்டிகை, உத்திரமேரூர் பேரூராட்சி உள்ளிட்ட இடங்களில் திமுக சார்பில்
கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய, நகர செயலாளர்கள் குமார்,
ஞானசேகரன், பாரிவள்ளல் ஆகியோர் தலைமை தாங்கினார். கிராம சபைக்
கூட்டத்தில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ மற்றும் காஞ்சி எம்.பி
ஜி.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு தமிழகத்தைக் கடந்த பத்து ஆண்டுகளாகச் சீரழித்த
அதிமுக அரசின் ஊழல்களைப் பட்டியலிட்டுக் குற்றப்பத்திரிகையைப் பொதுமக்களிடம்
வழங்கினார். மேலும் அதிமுகவை நிராகரிப்போம் என்ற முழக்கத்தை வலியுறுத்தி பொதுமக்களின்
கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர். இதில் முதல் கையெழுத்தாக
சாலவாக்கத்தில் க.சுந்தர் எம்.எல்.ஏ தனது கையெழுத்திட்டு துவக்கி
கையெழுத்தியக்கத்தை துவக்கி வைத்தார். பின்னர் ஏராளமான பொதுமக்கள்
கலந்துகொண்டு கையெழுத்திட்டு அதிமுகவை நிராகரிப்போம் என்று உறுதிமொழி ஏற்று
கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில்
தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன், விவசாய அணி அமைப்பாளர்
ஏழுமலை, இலக்கிய அணி துணை அமைப்பாளர்கள் கோபாலகிருஷ்ணன்,
காளிதாஸ், ஆதிதிராவிடர் நலத் துணை அமைப்பாளர் துரைவேல்,
பொறியாளர் அணி சசிகுமார், இணைஞரணி இணைச் செயலாளர் பெ.மணி,
நிர்வாகிகள் வெங்கடேசன், தயாளன், வடிவேலு, முரளி உட்பட திமுக
நிர்வாகிகள் உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments