Disqus Shortname

உத்திரமேரூரில் பூத்வாரியாக மகளிர் குழு நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர்

உத்திரமேரூர் 20-12-2020

உத்திரமேரூரில் அதிமுக சார்பில் பூத்வாரியாக புதிய
மகளிர் குழு நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது நிகழ்ச்சியில்   காஞ்சி மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமை தாங்கினார்.  கழக அமைப்புச் செயலாளரும்  மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான  வாலாஜாபாத் பா.கணேசன் மாவட்ட எம்.ஜி.ஆர் அணி செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்  மாவட்ட அவைத் தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்  நிகழ்ச்சியில் காஞ்சி மண்டல தேர்தல் குழு பொறுப்பாளர் கோகுல இந்திரா கலந்து கொண்டு  பூத்வாரியாக புதிய மகளிர் குழுக்கள் துவங்கப்பட்டு அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் பூத்வாரியாக தேர்வு செய்யப்பட்ட மகளிர் அணி நிர்வாகிகள் அரசின் நலத்திட்டங்களை பொது மக்களுக்கு எடுத்துரைத்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்றனர். நிகழ்வின்போது 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் புதிய மற்றும்  மாற்று கட்சியிலிருந்து அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர் நிகழ்ச்சியில்ஒன்றிய செயலாளர்கள் தர்மன் பிரகாஷ் பாபு தங்க பஞ்சாட்சரம்  கூட்டுறவு சங்க தலைவர்கள் தண்டரை தணிகைவேல், திருவந்தவார் முருகன், இளைஞரணி ஜெயவிஷ்ணு, மாணவரணி துரைபாபு, தமிழ்ச்செல்வன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

No comments