Disqus Shortname

உத்திரமேரூர் அருகே மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி

உத்திரமேரூர் 14/12/2020 
உத்திரமேரூர் அருகே காக்கநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சுமை தூக்கும் தொழிலாளி ரங்கநாதன் 45 இவர் காக்கநல்லூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை விவசாய நிலத்தில் ஏர் ஓட்டிவிட்டு நிலத்திற்கு தண்ணீர் பாச்சுவதற்காக மோட்டாரை ஆன் செய்துள்ளார். அப்போது இவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை கண்ட அக்கம்பக்க விவசாயிகள் உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உத்திரமேரூர் போலீசார் ரங்கராதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments