உத்திரமேரூரில் மக்கள் சபைக் கூட்டத்தில் அதிமுகவை நிராகரிப்போம் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட விசூர், மானாம்பதி, உத்திரமேரூர்
பேரூராட்சி 14 மற்றும் 17 வது வார்டு உள்ளிட்ட இடங்களில் திமுக சார்பில்
மக்கள் சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய, நகர செயலாளர்கள்
ஞானசேகரன், பாரிவள்ளல் ஆகியோர் தலைமை தாங்கினார். மக்கள் சபைக்
கூட்டத்தில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ மற்றும் காஞ்சி எம்.பி
ஜி.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளாகச்
சீரழித்த அதிமுக அரசின் ஊழல்களைப் பட்டியலிட்டுக் குற்றப்பத்திரிகையைப் பொதுமக்களிடம்
வழங்கினர். மேலும் அதிமுகவை நிராகரிப்போம் என்ற முழக்கத்தை வலியுறுத்தி பொதுமக்களின்
கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் ஏராளமான பொதுமக்கள்
கலந்துகொண்டு கையெழுத்திட்டு அதிமுகவை நிராகரிப்போம் என்று உறுதிமொழி ஏற்று
மக்கள் சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில்
தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன், விவசாய அணி அமைப்பாளர்
ஏழுமலை, இலக்கிய அணி துணை அமைப்பாளர்கள் கோபாலகிருஷ்ணன்,
காளிதாஸ், குணசேகரன், பொறியாளர் அணி சசிகுமார், நிர்வாகிகள்
சுந்தர்ராமன், வெங்கடேசன், தயாளன் மற்றும் திமுக நிர்வாகிகள் உட்பட
பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments