உத்திரமேரூரில் சட்ட மன்ற தொகுதி அஇஅதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்
உத்திரமேரூர் 22/12/2020
உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் அஇஅதிமுக உத்திரமேரூர் சட்ட மன்ற தொகுதி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமை தாங்கினார். கழக அமைப்பு செயலாளரும் கூட்டுறவு சங்கத் தலைவருமான வாலாஜாபாத் பா.கணேசன், அமைப்பு செயலாளர் மைதிலிதிருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத் தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் காஞ்சி மண்டல தேர்தல் பணிக்குழுப் பொருப்பாளர் கோகுலஇந்திரா கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். இதில் வரவிருக்கும் சட்ட மன்ற தேர்தலில் அதிமுக அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான அரசை அறியனையில் அமர வைக்க பாடுபட வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ்பாபு, தங்கபஞ்சாட்சரம், தருமன். தும்பவனம் ஜீவானந்தம், அக்ரி நாகராஜன், தண்டரை தணிகைவேல், திருவந்தவார் முருகன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments