உத்திரமேரூர் அருகே பாலேஸ்வரம் கிராமத்தில் அடுத்தடுத்து மூன்று கோவில் உண்டியல்கள் உடைப்பு
உத்திரமேரூர் 14/02/2024
உத்திரமேரூர் அடுத்த பாலேஸ்வரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பாலேஸ்வரர் ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்தில் அதே கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் 45 என்பவர் கோவிலில் காலை
மாலை என இருவேலையும் பூஜை செய்து பராமரித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை
பூஜைகளை முடித்துவிட்டு இரவு கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர்
இன்று காலை கோவிலுக்கு வந்து பார்த்த போது கோவிலின் வெளியே இருந்த உண்டியல்
உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதேபோல் அதே
கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர் ஆலயம் மற்றும் கெளுத்தியம்மன் ஆலயம் ஆகிய
ஆலயங்களிலும் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து இதுகுறித்து சாலவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்
பேரில் சாலவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments