உத்திரமேரூரில் கல்வெட்டுக் கோவிலை பார்வையிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
உத்திரமேரூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என்
மக்கள் நடைபயணம் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
உத்திரமேரூர் பேரூராட்சி அலுவலகம் அருகே நடைபயணத்தினை துவங்கி சன்னதி தெரு, பஜார்
வீதி வழியாக நடைபயணமாக சென்று அம்பேத்கர் சிலை அருகே நடைபயணத்தை முடித்தார்.
நடை பயணத்தின் போது பொது மக்களுடன் செல்பி எடுத்தும், கைகள் குலுக்கியும்
பொதுமக்களின் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டு நடைப்பயணத்தினை
மேற்கொண்டார். மேலும் பிரசித்தி பெற்ற வைகுண்ட வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள
குடவோலை கல்வெட்டுக்களை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து அவர்
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது பத்தாம் நூற்றாண்டில் குலோத்துங்க
சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட வரதராஜ பெருமாள் கோவிலில் நான்கு புறமும் கல்வெட்டுகள்
உள்ளன. இதில் பழங்காலத்தில் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகள் பொறிக்கப்பட்டுள்ளன.
தேர்தலில் போட்டியிடுபவர்கள் 35 தவறுகள் செய்தவர்கள் தேர்தலில் நிற்க தகுதி இல்லாதவர்கள்
எனவும் தகுதியுள்ளவர்களின் நிபந்தனைகளும் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும்
பழங்காலதிலேயே வாரியம் இருந்துள்ளது இதில் வாரியத்தில் உறுப்பினராக இருந்தால் மூன்று
ஆண்டுகள் தேர்தலில் நிற்கக்கூடாது எனவும் வாரியத்தில் உறுப்பினராக இருப்பவர்களின்
உறவினர்கள் யாரும் தேர்தலில் நிற்கக்கூடாது உள்ளிட்டவை பல்வேறு நிபந்தனைகள்
கல்வெட்டில் அச்சிடப்ப்பட்டுள்ளனர். மேலும் சென்னை வாசிகள் சுற்றுலா செல்ல
வேண்டுமென்றால் மால் போன்ற இடங்களில் செல்வதை தவிர்துவிட்டு சென்னையில் இருந்து 2
மணி நேர பயணத் தொலைவில் உள்ள உத்திரமேரூரிர்க்கு வந்து இங்குள்ள புராதாணமாக
கோவில்கள் கல்வெட்டுகள் முக்கூடல் சங்கமிக்கும் இடங்கள் உள்ளிட்டவைகளை பார்வையிட
வேண்டும் என்றார். நிகழ்வின் போது பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments