உத்திரமேரூர் அருகே அகோரகாளி ஸ்ரீஅங்காளம்மன் ஆலய 10 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா
உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட பட்டஞ்சேரி கிராமத்தில் பிரசித்தப் பெற்ற
அகோரகாளி ஸ்ரீ.அங்காளயம்மன் ஆலயத்தில் 10 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு
விமரிசையாக நடைப்பெற்றது. தீமிதித் திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு
அபிஷேக ஆராதனை நடைப்பெற்றது. இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு
அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து
விரதமிருந்த பக்தர்கள் வீதியுலா வந்து கோவில் வளாகத்தில் மூட்டபட்டிருந்த அக்னி
குண்டத்தில் இறங்கி கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்தோடு பக்தர்கள் தீ
மிதித்தனர். விழாவையோட்டி கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம்
வழங்கப்பட்டது. விழாவிற்கு பட்டஞ்சேரி மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள்
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவிற்கான
ஏற்பாடுகளை விழாகுழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்
No comments