Disqus Shortname

முன்னாள் மாணவர்கள் சார்பில் ஸ்மார்ட் வகுப்பறை வழங்கும் விழா

உத்திரமேரூர் 23/12/2019
உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட சதுக்கம் பகுதியில் செயல்பட்டு வரும்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் இணைந்து  பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியர்களுக்கான ஸ்மார்ட் வகுப்பறை  அமைத்து அதற்கான திறப்பு விழா   நடந்தது. நிகழ்ச்சியில் பள்ளித்  தலைமை ஆசிரியர் சந்தானலட்சுமி தலைமை தாங்கினார். உதவி தொடக்க  கல்வி அலுவலர்கள் சேஷாத்திரி, ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை  வகித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் இணைந்து ரூ, 1.20 லட்சம்  மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய ஸ்மார்ட் வகுப்பறையினை முன்னாள்  மாணவர்கள் பள்ளி மாணவர்கள் பயன்பாட்டிற்கு வழங்கி வாழ்த்தி பேசினர். மேலும் தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளிகளும் தரம் உயர்ந்து  வருவதால் அனைவரும் அரசு பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்க்க  முன் வர வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தினர். நிகழ்ச்சியில்  முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments