Disqus Shortname

உத்திரமேரூர் அருகே இடு பொருள் விற்பனை நிலையம் திறப்பு விழா

உத்திரமேரூர்
உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கண்டிகை கிராமத்தில் உழவர்
உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் விவசாயிகள் இடு பொருள் மற்றும் விதை விற்பனை நிலையம் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் உத்திரமேரூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத் தலைவர் சோழனூர் மா.ஏழுமலை  தலைமை தாங்கினார். நிர்வாக குழு இயக்குனர்கள் பரசுராமன், வீரப்பன், தாமஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய வேளாண் நிறுவன திட்ட அலுவலர் பிரகாஷ் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் வெங்கடாசலம் கலந்து கொண்டு விவசாயிகள் இடு பொருள் மற்றும் விதை விற்பனை நிலையத்தினை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பயன்பெறு வகையில் விவசாயிகள் நேரடியாக தரமான விதைகள் வாங்குவதற்கும், விவசாயிகள் தங்களது விவசாய பொருட்களை விற்பனை செய்வதற்கும், பொது மக்கள் விவசாயப் பொருட்களை நேரடியாக பெருவதற்கும் இந்த விற்பளை நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக கூறினர். நிகழ்ச்சியில் டாக்டர் சுப்பரமணியன்,மாயகிருஷ்ணன், அருண்பிரகாஷ், சந்தானகிருஷ்ணன் உட்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

1 comment:

  1. என் பெயரை டாக்டர் சுப்பிரமணியம் என்று கவுரவித்தமைக்கு நன்றி.
    நான் டாக்டர் அல்ல.
    P.K.சுப்பிரமணியன்
    பென்னலூர்

    ReplyDelete